செய்திகள் :

கரூர்: கம்பி வேலியைத் தொட்ட ஆசிரியை மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி (வயது: 55).

இவர், மாயனூரில் உள்ள டான்செம் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த போது அருகில் இருந்த தனியார் டவர் வேலியின் இரும்பு கம்பியைத் தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் அவரைக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, அவரது உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகச் சவக்கிடங்கில் வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டவரை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்கக் கோரியதோடு, தனியார் டவர் அதிகாரிகள் இங்கு வரும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, மகாதானபுரம் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கிலும், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திருச்சி கரூர் சர்வீஸ் சாலை முன்பும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

dead

தனியார் டவர் அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொள்வதாகக் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, மகாதானபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்ததையடுத்து அங்கும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்தனர்.

தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனியார் டவர் மின்வேலியைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Scam Alert: ஆன்லைன் ஆர்டர் டெலிவரி அட்டைப்பெட்டியை வைத்து பணமோசடி; பகீர் பின்னணியும் தற்காப்பும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்கா... மேலும் பார்க்க

கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீட்ட போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி உதயசூரியபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (வயது: 21).இவர், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில்,... மேலும் பார்க்க

கும்பகோணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரின் விவரங்களை மறைக்கிறதா போலீஸ்?

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அதே கடையில் குடவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முக பிரபு (2... மேலும் பார்க்க

``மீட்டு தந்தது போலி..'' - ரூ.23 கோடி மதிப்புள்ள வைரக்கல் வழக்கில் வியாபாரி புகார்; திடீர் திருப்பம்

சென்னை அண்ணாநகர், பி பிளாக், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (69). இவர், வைர கல், நகைகளை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமண... மேலும் பார்க்க