செய்திகள் :

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

post image

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக  இருக்கிறது.

வானதி சீனிவாசன்

மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்குவோம் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்லியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல், தேர்தல் நேரத்தில் இப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கிறார்கள். இந்த அரசு போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

கரூர் சம்பவத்தை  சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கரூரில் நடந்ததை விபத்தாக ஏற்க முடியாது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்துள்ளது.

கரூர் | சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணையில் உண்மை வெளி கொண்டு வரப்படும். கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள்  நினைக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதை அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜகவின் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு வரும் தொழிலதிபர்களை கூட திமுக மிரட்டுகிறது.

கரூர் துயரம்
கரூர் துயரம்

இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. திமுக அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கிறது . நாளை சட்டசபை கூட்டம் நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும்.”  என்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்ன... மேலும் பார்க்க

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.... மேலும் பார்க்க

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க