செய்திகள் :

கரூர் துயரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

post image

கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.

இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Governor R.N. Ravi has sought a report from the Tamil Nadu government regarding the incident in which 39 people were killed in the Karur TVK stampede.

கரூர் பலி: வேதனை அளிக்கிறது - தில்லி முதல்வர்

கரூரில் நேர்ந்த துயரமான சம்பவம் வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்திற்கு 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார். இதுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவ... மேலும் பார்க்க

கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் சிக... மேலும் பார்க்க

கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கரூர் பலி: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்

கரூர் தவெக கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர... மேலும் பார்க்க

கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தி... மேலும் பார்க்க