செய்திகள் :

கரூர்: மதுபோதையில் தகராறு; சித்திரவதை தாங்காமல் கட்டையால் அடித்த மனைவி, கணவன் மரணம்..

post image

கரூர், ராயனூர் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், கூலி தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு இவர்களின் மகன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு வருவாராம். அதோடு, தனது மனைவியோடு தகராறில் ஈடுபட்டு வருவாராம். அப்படி, குடிபோதையில் இருந்த சந்திரசேகர் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சந்திரசேகருக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானதாக சொல்லப்படுகிறது.

குடி குடியைக் கெடுக்கும்!

இதனால் ஒருகட்டத்தில் சித்திரவதை தாங்காமல் ஆத்திரமடைந்த சரண்யா வீட்டில் கிடந்த கட்டையால் சந்திரசேகரின் பின்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், காலை சந்திரசேகர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து சரண்யாவை கைது செய்தனர்.

`மதுபோதையில் நடக்கும் தகராறு சம்பவங்கள், மரணங்கள் அதிகரிப்பதால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது' என சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க