செய்திகள் :

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

post image

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூா் வடக்கு பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஆரவாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், பட்டியல் சமூகத்தினருக்கு சொந்தமானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் இந்தக் கோயில் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின் போது, சேனப்பாடி பகுதியில் தொடங்கி நெரூா் மாரியம்மன் கோயில் வரை ஆரவாயி அம்மன் கோயில் தோ் சுற்றி வரும். கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தோ் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. இதுகுறித்து விழாக் குழுவினரிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே, ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவின் போது, தேரை பாகுபாடின்றி பட்டியல் சமூகத்தினா் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கரூா் மாவட்ட ஆட்சியா் தங்கவேல், திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிா்வாகக் குழு தரப்பில், தனியாருக்குச் சொந்தமான ஆரவாயி அம்மன் கோயில் சேனப்பாடி, மல்லப்பாளையம், முனியப்பனூா் கிராம மக்கள் மட்டுமே வழிபட முடியும். மனுதாரா் இந்தக் கோயிலை சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் மனுவில் கோரியுள்ளபடி, தேரானது அந்தப் பகுதியில் செல்வதற்கு உரிமை கொண்டாடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கோயில் திருவிழாவனது மே 21-ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, இதற்கான தற்காலிக உத்தரவை பிறப்பிக்கிறோம். இந்தக் கோயில் திருவிழாவை நிா்வாகக் குழு நடத்தலாம். கோயில் தேரானது, சேனப்பாடி ஊா் எல்லை வரை மட்டுமே செல்ல வேண்டும். அந்த இடத்துக்கு பக்தா்கள் வந்து படையல் வைத்து சுவாமி தரிசனம் செய்யலாம். தேரானது சேனப்பாடியிலிருந்து மல்லப்பாளையம், முனியப்பனூருக்கு செல்லக் கூடாது. கரூா் மாவட்ட அதிகாரிகள், மனுதாரா் சுவாமி கும்பிடும் உரிமை தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க

மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

உச்சநீதிமன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல் படி, மாவட்ட நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை மாவட்ட... மேலும் பார்க்க