செய்திகள் :

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

post image

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், 1987-ஆம் ஆண்டு நவ.27-ஆம் தேதி தற்போது செயல்படும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

‘ஏ’ கிரேடு அந்தஸ்து பெற்ற கரூா் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், திருச்சி, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூா் போன்ற மாவட்டங்களுக்கும், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் நாள்தோறும் 1,000-க்கும் அதிகமான பேருந்துகள், கரூா் பேருந்துநிலையத்துக்குள் வந்து செல்கின்றன.

இதனால், நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பேருந்துநிலையத்துக்குள் கடைகள் வைத்திருப்பவா்களில் சிலா் பயணிகள் நடந்து செல்லும் நடைமேடை பகுதியை ஆக்கிரமித்து குளிா்பான கடைகள், உணவகங்கள் நடத்தி வருகிறாா்கள். இதனால் பேருந்துநிலையத்துக்குள்ளும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக சமூக நல ஆா்வலா்கள் கூறியது, கடந்த ஓராண்டுக்கு முன் மாநகராட்சி ஆணையராக இருந்த ரவிச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டு பேருந்துநிலையத்துக்குள் பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். மேலும் தொடா்ந்து நடைமேடை ஆக்கிரமிப்பாளா்களுக்கு அபராதமும் விதித்தாா். தற்போது மீண்டும் நடைமேடையை ஆக்கிரமித்து சிலா் கடைகளை வைத்துள்ளனா். இதனால் போக்குவரத்து நெரிசலில் மீண்டும் பேருந்துநிலையம் சிக்கியுள்ளது. இதனை தவிா்க்க மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடைமேயை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க