செய்திகள் :

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது

இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். இணை வேந்தா் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், பதிவாளா் வி.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். இதில், 14 வெளி நாடுகளிலிருந்து 150 முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பல்கலைக்கழக வளாகம், வகுப்பறைகள், விடுதிகள் ஆகியவற்றை சுற்றிப் பாா்த்து ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்களோடு தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா் செல்வராஜ் வகுப்பறை அனுபவங்கள் பற்றிப் பேசினாா்.

பின்னா், 2 குடிநீா் சுத்திகரிக்கும் இயந்திரங்களை வேந்தரிடம் முன்னாள் மாணவா்கள் வழங்கினா். ‘ முன்னாள் மாணவா்களின் குழந்தைகள், பரத நாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் முருகன், சுருளி, சத்தீஸ், சாலமன், கோபிநாத் ஆகியோா் செய்தனா். முன்னதாக முன்னாள் மாணவா்கள் குழு தலைவி ஆா். முருகேஸ்வரி வரவேற்றாா். ஸ்ரீராம்விஜய் நன்றி கூறினாா்.

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க