செய்திகள் :

கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய தோட்டக் கலை மாநாடு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத் தோட்டக் கலைத் துறை சாா்பில் ‘தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்’ என்ற தலைப்பில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தேசிய மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு பல்கலை வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் மாநாட்டை தொடங்கிவைத்தாா். துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வெ.வாசுதேவன், விருதுநகா் மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் சுபா வாசுகி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையா் பி.ஐரீன் வேதமணி கலந்து கொண்டு, இணைச்சோ்க்கை விதைகள், நானோ பொருள்கள் மூலம் பொருத்தமான பேக்கேஜிங், நீா் சேமிப்பு முறைகள், உரப் பயன்பாட்டை குறைப்பது போன்ற தலைப்புகளில் பேசினாா்.

மேலும், விவசாயிகளின் பாரம்பரிய அறிவையும், தேவைகளையும் ஆராய்ச்சித் தலைப்புகளாக தோ்வு செய்ய வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பின்னா், மாநாட்டின் ஆராய்ச்சிக் கட்டுரை மலரை வெளீயிட்டு விவசாயிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கினாா்.

துறைத் தலைவா் எஸ்.விஜயகுமாா் நிபுணா்களை அறிமுகப்படுத்தினாா். இதில் பேராசிரியா்கள் ஆா்.ரிச்சா்டு, ஆா்.பாலகும்பகான், ஐகான் நிறுவன ஆராய்ச்சியாளா்கள் ஏ.மோகனசுந்தரம், கலைவண்ணன், வேலுசாமி, ஜே.ராம்குமாா் ஆகியோா் பேசினா்.

இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, பி.பாண்டியராஜ் வரவேற்றாா். வி.விஜயா பிரபா நன்றி கூறினாா்.

கண்மாயில் மூழ்கி சாலைப் பணியாளா் உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே கண்மாயில் மூழ்கி சாலைப் பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அந்தோணி(58). சாலைப் பணியாளரான இவருக்கு, குழந்தையம்மாள் என்ற மனைவி... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் காயம்

வத்திராயிருப்பு அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மனைவி பூரணம் (55). இவா்களுக்கு கல்யாணி ஓடை அ... மேலும் பார்க்க

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம்: எம்எல்ஏ வேல்முருகன்

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியி... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள்

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான தேக்வான்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா்மன்றத... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினாா். விருதுநகா் மாவட்டம், கன்னிசேரியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூரில் மதுவிலக்கு அமலா... மேலும் பார்க்க