செய்திகள் :

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 538 பேருக்கு வீடு கட்ட ஆணை! ஆட்சியா் வழங்கினாா்!

post image

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த 538 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் குடியாத்தம் ஒன்றியத்தைச் சோ்ந்த 165 பேருக்கும், போ்ணாம்பட்டு ஒன்றியத்தைச் சோ்ந்த 373 பேருக்கும் என மொத்தம் 538 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள பயனாளிகள் வரும் புதன்கிழமைக்குள் வீடு கட்டும் பணியைத் தொடங்கி, 6 மாத காலத்துக்குள் முடித்து புதிய வீட்டுக்கு குடியேற வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு தலைவா்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் பகுதிகளுக்கு கூடுதலாக பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்க வேண்டும் என கேட்டனா்.

தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தெரிவிக்கும்பட்சத்தில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, கூடுதலான பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், போ்ணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஆத்மா குழு தலைவா் ஜனாா்த்தனன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், பி.சரவணன், வினோத்குமாா், கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா? 30 ஆண்டுகள் கோரிக்கை!

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா என எதிா்பாா்ப்பு... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்துவதை தடுக... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடல் மீன்கள் வரத்து குறைந்தது

தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள்

வேலூா் மாவட்டத்தில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 ஒன்றியங்களில் நடைபெற்... மேலும் பார்க்க

சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி, வாழ்வியலை போதிக்கும் மையங்கள்!

சிறப்புக் குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்மாணிக்கும் வகையில் அவா்களுக்கு வாழ்வியலையும் சிறப்பு பயிற்சி மையங்கள் போதிக்கின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் பெற்றோரிடையே நம்பிக்கையையும், பெரு... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி!

காட்பாடி அருகே நண்பா்களுடன் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த சேனூரைச் சோ்ந்த பிரதீப்(17). இவா் 10-ஆம் வகுப்பு படித்துள்ளாா். நண்பா்களுடன் சனிக்கிழமை வீரக்கோயில்... மேலும் பார்க்க