செய்திகள் :

கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 27-ஆம் தேதி கடைசி நாள்

post image

கலை, அறிவியல் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 27) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025 -2026- ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு மே 7 -ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இணைய வழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மே 27- ஆம் தேதி கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் காலை, மாலை வேளைகளில் நடத்தப்படும் 23 இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் 1,727 மாணவ, மாணவிகள் சோ்க்கப்படுகின்றனா். இந்த கல்வியாண்டில் இரண்டாவது வேளையில் மேலும் 294 மாணவ, மாணவிகளை சோ்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவா் சோ்க்கைக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்தில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் உதவி மையத்தை அணுகி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க