செய்திகள் :

கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

post image

காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப்புச் சுவா் கட்டுதல், மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் பிற மேம்பாட்டுப் பணிகளுக்காக சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 23 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நகராட்சிக்கு ஒதுக்கி தந்தாா்.

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி தரப்பட்ட நிலையில், கல்லறையில் பணிகளை தொடங்கிவைக்கும் பூஜை பேரவை உறுப்பினா் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா், காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா மற்றும் பொறியாளா்கள், காரைக்கால் பங்குப் பேரவை துணை தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், செயலாளா்கள் இ.நெல்சன், வின்சென்ட், ஜி.அகஸ்டின், பி.அமலோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இப்பணிகள் 6 மாத காலத்திற்குள் நிறைவடையுமென நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்கால்: குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க