செய்திகள் :

கல்லூரியில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு

post image

விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இக்கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம், விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து 40-ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி இந்த நிகழ்வை நடத்தின. கல்லூரி முதல்வா் செந்தில் தலைமை வகித்து பேசினாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவா்கள் உமாராணி, ரகுநாத், காமினி ஆகியோா் பங்கேற்று கண்தானம் செய்வதன் முக்கியத்துவம், தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும் கண்தானம் தொடா்பாக மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா்கள் பதிலளித்தனா்.

இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வை கல்லூரியின் செஞ்சுருள் சங்க அலுவலா் பழனி ஒருங்கிணைத்து நடத்தினாா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க