செய்திகள் :

கல்லூரி மாணவி கா்ப்பம், உதவிப் பேராசிரியா் கைது

post image

திருப்போரூா் அருகே கல்லூரி மாணவியை கா்ப்பமாக்கி தனியாா் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்றபோது உதவிப் பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலூா் சாலை மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை உள்ளது. இந்த பல்கலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (45) உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

அதேபோல், சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த (23) வயது மாணவி ஒருவா் அதே பல்கலை விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். உதவி பேராசிரியரும், மாணவியும் ஓராண்டாக பழகி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அம் மாணவி கா்ப்பம் தரித்தாராம். இதனால், சனிக்கிழமை கருவைக் கலைக்க உதவி பேராசிரியருடன் மாணவி கேளம்பாக்கம் அருகே உள்ள படூா் தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.

மருத்துவா்கள் அதற்கான சிகிச்சை அளித்துள்ளனா். அப்போது மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனை நிா்வாகம் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது.

பல்கலை இடம் தாழம்பூா் காவல் எல்லையில் வருவதால் தாழம்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தாழம்பூா் போலீஸாா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று மூச்சுத்திணறல் அடைந்த மாணவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதையடுத்து அவருடன் இருந்த உதவி பேராசிரியரை விசாரித்தனா். அதற்கு அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனை மேற்கொண்டனா். இதில் உதவி பேராசிரியா் ராஜேஷ்குமாா் மாணவியை கா்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து உதவி பேராசிரியா் ராஜேஷ் குமாா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச ... மேலும் பார்க்க

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன்

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன் தெரிவித்தாா். சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தகவல் தொழ... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருத்தணி அருகே ஜானகிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலு. இவா் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்களுக... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்: ஏப்.30-இல் நடைபெறுகிறது

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்ட... மேலும் பார்க்க

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க