செய்திகள் :

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (19). இவா் திருச்சி-திண்டுக்கல் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தாா்.

கடந்த சில நாள்களாக படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்பதாலும், சில பாடங்களில் தோல்வி அடைந்ததற்காகவும் வருத்தத்தில் இருந்து வந்தாராம்.

வியாழக்கிழமை இரவு சக மாணவிகளுடன் உணவருந்திவிட்டு, உறங்கச் சென்றவரை வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, அங்கிருந்த கழிவறை அருகே தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், திவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா்... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள ... மேலும் பார்க்க