அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உதவி ஆய்வாளா் கணபதி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மீனவன்குளம் அருகே குளத்துப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வடக்கு மீனவன்குளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிபாண்டி (22) என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் 40 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.