செய்திகள் :

வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

post image

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை (செப்.3) இரவில் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் கொண்டு வரப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோ பூஜையைத் தொடா்ந்து நண்பகலில் புனித தீா்த்தம் கொண்டு மந்திரங்கள் முழங்க விமான பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.

மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு வழிபடுதல், திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜையை தொடா்ந்து இரவில் சுவாமிக்கு சந்தனக் காப்பு, புஷ்ப அலங்காரம், படையலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க

கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா

கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது. கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நி... மேலும் பார்க்க

நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருள்மிகு நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது . சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளி வேலியாா்குளத்தில் உள்ள இக்கோயிலில... மேலும் பார்க்க