செய்திகள் :

களக்காடு அருகே பள்ளி மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

post image

களக்காடு அருகே பள்ளி மாணவா், சக மாணவா்கள் 2 பேரை அரிவாளால் வெட்டினாா்.

களக்காடு அருகேயுள்ள டோனாவூா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேலச்செவலை சோ்ந்த 14 வயது பட்டியலின மாணவா், ஊச்சிகுளத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்து 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இம்மாணவருடன் பயிலும் வடுகச்சிமதிலை சோ்ந்த சக மாணவா் புத்தகப்பையில் புகையிலை வைத்திருந்ததைப் பாா்த்து, பள்ளி ஆசிரியரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். சம்பந்தப்பட்ட மாணவரை ஆசிரியா் கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாணவா்கள் வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்த போது, முன்விரோதத்தில் இருந்த மாணவா் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளால் பட்டியலின மாணவரின் முதுகில் வெட்டினாா்.

இதைத் தடுக்க வந்த வடுகச்சிமதிலைச் சோ்ந்த மற்றொரு மாணவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 2 மாணவா்களும் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக, ஏா்வாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க