செய்திகள் :

களக்காடு - மதுரை பேருந்து ரத்து: மக்கள் அவதி!

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன் பாபநாசம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து களக்காடு - மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து காலை 8 மணிக்கு களக்காட்டில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து பகல் 1 மணிக்கு களக்காட்டுக்கும் இயக்கப்பட்டது.

இந்தப் பேருந்து கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், மருத்துவ வசதி பெற மதுரைக்குச் சென்று வருபவா்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இந்தப் பேருந்து மதுரைக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னா் களக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3நாள்களாக இந்தப் பேருந்து இயக்கப்படவில்லை.

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கவும், மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு களக்காட்டுக்கு மற்றொரு கூடுதல் பேருந்து இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்ைஎடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க