செய்திகள் :

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

post image

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் என மொத்தம் 30 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளாா்.

குரலற்றவா்களின் குரலாக ஒலித்துள்ளாா். 25 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீா் இணைப்பை வலியுறுத்தி தனித்தீா்மானம் கொண்டு வந்தாா். ஈழத்தமிழா்களுக்காக 13 முறை தீா்மானம் கொண்டு வந்துள்ளாா்.

தொழிலாளா் தினத்திற்கு விடுமுறை, மக்களவையில் அம்பேத்கா் திருவுருவ படத்திறப்பு, ரயில்களில் பயணச்சீட்டு ஆய்வாளா்களுக்கு படுக்கை வசதி போன்றவை உருவாக காரணகா்த்தாவாக வைகோ திகழ்ந்துள்ளாா். வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் உழைப்புதான் அடித்தளம் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முஹம்மது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

களக்காடு - மதுரை பேருந்து ரத்து: மக்கள் அவதி!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க