11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
களியக்காவிளை அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
களியக்காவிளை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மருதங்கோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து அவரது பையை சோதனையிட்டனா்.
அதில் 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் மருதங்கோடு, சிறுகாட்டுவிளையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அனீஸ் (28) என்பதும் தெரிந்தது.
இதையடுத்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து, அனீஸை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.