கசாப்பு கடையா வச்சுருக்கேன்? ’பெரிய பாய்’ என்ற பெயருக்கு ரஹ்மான் ரியாக்ஷன்!
கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின் தடை
ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் புதன்கிழமை (மே 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கள்ளிமந்தையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா தெரிவித்திருப்பதாவது: கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூா், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூா், அப்பியம்பட்டி, பூசாரிப்பட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூா், கே.டி. பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.