செய்திகள் :

காஞ்சிபுரத்தில் இன்று புத்த பிக்குகள் பேரணி, மாநாடு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணி, மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள யாதவா சத்திரத்திலிருந்து தொடங்கும் பேரணியில் 150-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், பிக்குணிகள் பங்கேற்கின்றனா்.

பேரணி காலை 8 மணிக்கு தொடங்கி காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூரில் அமைந்துள்ள புத்தா் திருக்கோயிலில் நிறைவு பெறுகிறது.

இதன் தொடா்ச்சியாக திரிபிடக சத்தம்ம ஓதுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

இதனையடுத்து நடைபெறும் மாநாட்டிலும், பேரணியிலும் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்க பேரவையின் தலைவா்கள், நிா்வாகிகள் பலரும் பங்கேற்கவுள்ளனா். மாலையில் நடைபெறும் மாநாட்டில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ச.மு.நாசா், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் சேச, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்பி, எம்எல் ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனா்.

இத்தகவலை தமிழ்நாடு பெளத்தா் சங்க பேரவையின் செயலாளா் போதி.அம்பேத்கா் தெரிவித்துள்ளாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் காஞ்சி சங்கராசாரியா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம், வேதபாராயணம், காலை 7, மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல் 12, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஆ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 389 பேருக்கு பணி ஆணை

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 137 நிறுவனங்கள் தங்களது மனிதவளத் தேவைக்காக நடத்திய நோ்காணலில் ஒரே நாளில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரியில் திறனறிவுப் போட்டிகள்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க