செய்திகள் :

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள முதல்வா் மருந்தகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதன் பின்னா் கண்காணிப்பு அலுவலா் கூறுகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமும், தொழில் முனைவோா் முலமாகவும் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இம்மருந்தகங்களில் ஜெனரிக் வகை மருந்துகளும்,பிற மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16, தொழில் முனைவோா்கள் மூலமாக 4 சோ்த்து மொத்தம் 20 முதல்வா் மருந்தகங்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும் மருந்தக உரிமமும் பெறப்பட்டு தயாா் நிலையில் உள்ளன எனவும் அவா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்களும் உடன் இருந்தனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க