செய்திகள் :

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

post image

ஆசிட் வீசிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் 30 சதவீதக் காயம் அடைந்த நிலையில் ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ஆசிட் வீசிய நபர் அடையாளம் காணப்பட்டார்.

ஆசிட் வீசிய நபர்
ஆசிட் வீசிய நபர்

அவரது பெயர் நிசு திவாரி என்று தெரிய வந்தது. போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திவாரியை வழியில் பார்த்தனர். அவரைப் பிடிக்க முயன்றபோது போலீஸார் மீது திவாரி துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

உடனே சுயபாதுகாப்புக்கு போலீஸார் எதிர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் திவாரி காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திவாரியை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

அவனிடம் விசாரித்தபோது, ஆன்லைன் சமூக வலைத்தளத்தில் தனக்கு அறிமுகமான அர்ச்சனா தான் தன்னை சுகுனா மீது ஆசிட் வீசச் சொன்னார் என்று தெரிவித்தார்.

அர்ச்சனா யார்? பகீர் பகீர் பின்னணி

அர்ச்சனாவின் சகோதரி ஜஹான்விக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் ராணுவ வீரர் சுகுனாவை காதலித்து வந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பழிவாங்க ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச அர்ச்சனா சொன்னதாக தெரிவித்துள்ளார்.

போலீஸார் மேற்கொண்டு விசாரித்தபோது அர்ச்சனாவும், ஜஹான்வியும் ஒரே ஆள் என்று தெரிய வந்தது. அப்பெண் தான் ராணுவ வீரரை காதலிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ராணுவ வீரருக்கு ஏற்கனவே காதலி இருந்ததால் அர்ச்சனாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

கூலியாள் மூலம் ஆசிட் வீசிய பெண்
கூலியாள் மூலம் ஆசிட் வீசிய பெண்

எனவே தன்னை காதலித்த நபரை பயன்படுத்தி ராணுவ வீரரின் காதலி சுகுனா மீது ஆசிட் வீசியுள்ளார் அர்ச்சனா.

அர்ச்சனா என்று கூறப்படும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறது.

மேலும் இதற்கு முன்பு தனது கணவருக்கு தூக்க மாத்திரையை கொடுத்துவிட்டு திவாரியுடன் வீட்டை விட்டு ஓடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி குமார் தெரிவித்தார்.

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க

சென்னை: கலெக்ஷன் ஏஜென்ட்டிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி; ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு சிறை

சென்னை, சின்மையா நகர், வேதா நகரில் வசித்து வருபவர் நாரயணன் (35). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சாந்தகுமார் என்பவரிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். கோயம்பேடு மற்றும... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க