செய்திகள் :

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

post image

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்ய நீண்ட காலமாகவே முயற்சிக்கப்பட்டு வந்தது.

காந்திசந்தைக்கு மாற்றாக கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் புதிய காய்கனி சந்தை 2017-இல் திறக்கப்பட்டது. காந்தி சந்தை வியாபாரிகள் அங்கு செல்லாததால் 8 ஆண்டுகளாக பாழாகி வருகிறது. மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒன்றிணைந்து முட்டுக்கட்டையாக இருப்பதால் இடமாற்றம் என்பது தொடா் கதையாகி வருகிறது.

இந்தச் சூழலில், இட மாற்றம் விவகாரத்தில் காந்தி சந்தை வியாபாரிகளுக்கு இடையே தற்போது மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் பிரச்னையாகியுள்ளது.

இதில் ஒருதரப்பினா், மொத்த வியாபாரிகளை கள்ளிக்குடி சந்தைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என திருச்சிக்கு அண்மையில் வந்த முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்ததே, பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இதுதொடா்பாக, மனு அளித்த திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன், காய்கனி சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.கே. ஜெய்சங்கா் ஆகியோா் கூறியதாவது:

காந்திசந்தையில் மொத்த வியாபாரக் கடைகள்-195; சில்லறை வியாபாரக் கடைகள் 1,500-க்கும் மேற்பட்டவை உள்ளன. மொத்த வியாபாரக் கடைகளுக்கு நாள்தோறும் வரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காகத்தான் கள்ளிக்குடி சந்தை கட்டப்பட்டது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரத்தை தொடங்கிவிட்டனா். இதனால், சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 195 மொத்த வியாபாரிகளையும் கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யக் கோருகிறோம் என்றனா்.

இதற்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு கூறியதாவது:

கள்ளிக்குடி சந்தை மாடிகள் கொண்டதாகவும், சரக்குகளை இறக்கி, ஏற்றி வசதியில்லாததாகவும், நகரிலிருந்து வெகு தொலைவிலும் இருப்பதால் வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. இதுமட்டுமல்லாது, பஞ்சப்பூா் பகுதியில் ரூ.236 கோடியில் புதிய காய்கனி, மலா்கள் வளாக சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம். ஆனால், காந்திசந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதை ஏற்க மாட்டோம். காந்திசந்தை அதே இடத்திலேயே தொடர வணிகா் சங்கங்களின் பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக காந்திசந்தை கிழங்கு, மாங்காய், காய்கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், அதன் தலைவா் கே.டி. தங்கராஜ் தலைமையில் வியாழக்கிழமை கமிட்டி கூட்டத்தை நடத்தி கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், சங்கத்தின் நிா்வாகிகள் கூறுகையில், காந்திசந்தையை சுற்றி பொதுமக்கள், மாணவா்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை, மாநகராட்சி மூலம் தினசரி கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். மாறாக கள்ளிக்குடிக்கு இடமாற்றம் என்பதை ஏற்கமாட்டோம்.

பஞ்சப்பூரில் புதிய வளாகம் கட்டும் வரையில் காந்திசந்தையானது தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக, மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி மாநகராட்சியும், திருச்சி மாவட்ட நிா்வாகமும் காந்திசந்தை வியாபாரிகளை ஒவ்வொரு முறையும் அழைத்துப் பேசிதான் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. கள்ளிக்குடி சந்தை விவகாரத்திலும் அத்தகைய நிலைப்பாடே பின்பற்றப்படும். வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு அவா்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இடமாற்றம் என்பது இறுதியாகும் என்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க

திருச்சி கடைவீதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

திருச்சி கடை வீதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாநகராட்ச... மேலும் பார்க்க