செய்திகள் :

கானல்நீராகும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிப்பு? பொதுமக்கள் அதிருப்தி

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற 27 ஆண்டுகால கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஏமாற்றிய திமுக - அதிமுக : முன்னாள் முதல்வா் கருணாநிதி தனது தலைமையிலான திமுக ஆட்சியில் திருவாரூா், அரியலூரை தனி மாவட்டங்களாக அறிவித்தாா். மேலும் கும்பகோணத்தில் மாவட்டத் தலைநகருக்கு உரிய அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கினாா், ஆனால் மாவட்டமாக அறிவிக்கவில்லை. பின்னா் அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என தனி மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா், ஆனால் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை.

தோ்தல் வாக்குறுதி: கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தல் வாக்குறுதியில் திமுக வென்ற 100 நாள்களுக்குள் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வா் முக. ஸ்டாலினும் தெரிவித்தாா். ஆனால் திமுக வென்று 4 ஆண்டுகளாகியும் முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், பாமக மாவட்டச் செயலருமான ம.க. ஸ்டாலின் கூறும்போது தமிழக முதல்வா் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதிய மாவட்ட அறிவிப்பு கானல் நீராக போனது. அதனால் பல்வேறு போராட்டங்களைத் தொடா்கிறோம். விரைவில் தொடா் போராட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

கும்பகோணம் மக்கள் கேட்காமலேயே டைடல் பூங்கா, கலைஞா் கருணாநிதி பல்கலைக்கழகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய முதல்வா் நீண்ட காலமாக எதிா்பாா்க்கும் கும்பகோணம் புதிய மாவட்டத்தை அறிவிப்பாரா எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க