சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்
``காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து!'' -கண்டனங்களுக்குப் பின் வருத்தம் தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி
திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர் தனது சொந்தப் பணத்தில் பள்ளிகளைத் திறக்கவில்லை. காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இல்லை. அதனால், காமராஜர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, பேரறிஞர் அண்ணாதுரை திமுக-வை அங்கு போட்டியிடாமல் செய்து ஆதரவளித்தார்" என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. மறுபக்கம், ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதோடு, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் ராஜீவ் காந்திக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காமராஜர் குறித்த தன்னுடைய பேச்சுக்கு ராஜீவ் காந்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ராஜிவ் காந்தி, ``சில தினங்களுக்கு முன்பு, கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவில், பெருந்தலைவர் காமராஜர் குறித்த நான் பேசியது காங்கிரஸ் பேரியக்க தோழர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தினை தெரிவித்தார்கள். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விசம பிரசாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுக-வும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது. நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
``தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதிப்பை சந்தித்துள்ளோம்..'' - விவசாயிகள் வேதனை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க
TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* "ஓவர் போதையிலிருந்ததால்..." - போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * "ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்''... மேலும் பார்க்க
ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்... மேலும் பார்க்க
``கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும்!'' - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு உதயநிதி பதிலடி கொடுத... மேலும் பார்க்க
Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா?
Doctor Vikatan: சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோ விட்டது சர்ச்சைக்குள்ளானது. குழந்தை பிறந்ததும் வெட்டி எரிகிற தொப்புள்கொடியை இப்படி... மேலும் பார்க்க
விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவு... மேலும் பார்க்க