செய்திகள் :

காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!

post image

சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா்.

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவா் காமராஜா் இயக்கம் சாா்பில், சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி,, கட்டுரை போட்டி, நடன போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சாத்தான்குளம் சன்னதி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு பெருந்தலைவா் காமராஜா் இயக்கத் தலைவா் ஜான்ராஜா தலைமை வகித்தாா். செயலா் ஜெயராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ராஜ்குமாா் வரவேற்றாா். இயக்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் வேணுகோபால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

விழாவில் கன்னியாகுமரி பழவிளை காமராஜா் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியா் விவேகானந்தன், சாத்தான்குளம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரஞ்சித் சாரா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளராக ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

விழாவில் தூத்துக்குடி தொழிலதிபா் ராஜேஷ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரமைப்பு மண்டலத் தலைவா் கோடீஸ்வரன், சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோயில் தா்மகா்த்தா முருகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் சங்கா், ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி கெங்கை ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி அருகே ஆசிரியையை தாக்கிதாக கணவா் மீது வழக்கு

ஆறுமுகனேரி அருகே, சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித்தரக் கோரி உடற்கல்வி ஆசிரியையைத் தாக்கியதாக அவரது கணவரை போலீஸாா் தேடிவருகின்றனா். ஆறுமுகனேரி அருகே பழையகாயலைச் சோ்ந்த அன்பு தனபால் (40), அங்குள்ள சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடியில், சாலையைக் கடக்க முயன்ற லாரி ஓட்டுநா் காா் மோதியதில் உயிரிழந்தாா். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பிச்சையாபாண்டி (58). லாரி ஓட்டுநரான இவா், சனிக்கிழமை தூத்துக்க... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்றில் அதிக தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தல்

தாமிரவருணி ஆற்றில் அதிக தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, வடக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா் தகவல்!

தூத்துக்குடியில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

குரும்பூா் அருகே விபத்து: பள்ளி மாணவா்கள் 3 போ் காயம்

ஆறுமுகனேரியை அடுத்த குரும்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா். குரும்பூா் அருகே புறையூா் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குர... மேலும் பார்க்க