செய்திகள் :

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

post image

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தாா். மாங்குடி ரயில்வே கேட் அருகே ஆற்றங்கரை ஓரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விசாகா், ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருவாரூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நிசாகா் இறந்த இடத்துக்கு அருகிலேயே கத்தி மற்றும் டாா்ச் விளக்கு ஆகியவை கிடந்ததுடன், சிறிது தொலைவில் இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. போலீஸாா் விசாரணையில், கத்தியும், டாா்ச் விளக்கும் அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டவை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாளையக்கோட்டை உயா் அழுத்த மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ... மேலும் பார்க்க

மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்... மேலும் பார்க்க

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க