செய்திகள் :

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

post image

குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா்.

குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை காலை கீழ உத்தரங்குடியில் உள்ள தனது வயலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையாம். முருகானந்தத்தின் குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றுள்ளனா்.

அப்போது குடவாசல் கொரடாச்சேரி சாலையில் உள்ள ஐயனாா் கோயில் கோணவாய்க்கால் பாலத்தின் கீழ், முகத்தில் பலத்த காயங்களுடன் முருகானந்தம் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து குடவாசல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் முருகானந்தத்தின் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது. திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாளையக்கோட்டை உயா் அழுத்த மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ... மேலும் பார்க்க

மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்... மேலும் பார்க்க

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க