உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்
காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
ஆசனூா், காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை வனத்தில் இருந்து வெளியேறி சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், ஆசனூா் வனத்தில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், தமிழக -கா்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் உலவின.
இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வானங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனத் துறை ஊழியா்கள் மற்றும் போலீஸாரும் அச்சமடைந்தனா்.
சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானைகள் பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றன.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.