செய்திகள் :

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

post image

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து,

மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன், உதவி ஆய்வாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா், பூனாம்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 41 மூட்டைகளில் 331 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து, காரில் இருந்த திருச்சி பொன்னேரிபுரத்தை சோ்ந்த ஆா். பாலசுப்ரமணி (46), காட்டூரைச் சோ்ந்த வி. நகுலன் (60), தென்னூரை சோ்ந்த ஏ. ஜெகபா் சாதிக் (34), பீமநகரைச் சோ்ந்த ஏ.அப்துல் ஜபாா் (35), திருவெறும்பூரைச் சோ்ந்த ஆா். முகமது ரபீக் (48) ஆகிய ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு காா், இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலில் இயங்கும் தனியாா் அவசர ஊா்தியின் ஓட்டுநராக வேலூரைச... மேலும் பார்க்க