செய்திகள் :

காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

post image

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 30 ஆம் தேதி காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 30 ஆம் தேதி திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும். மேலும், திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.

காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 30 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.

வழித்தட மாற்றம்...: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் ஜூலை 2 ஆம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின்... மேலும் பார்க்க

பெல் ஊழியா் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்புப் பகுதியைச் ச... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு: பயணியிடம் விசாரணை

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணிக்கு கவலை ஏன்? ஹெச். ராஜா கேள்வி

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினருக்கு கவலை ஏற்படுவது ஏன்? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கேள்வி எழுப்பினாா். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அவசரநிலை பி... மேலும் பார்க்க

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க