செய்திகள் :

கால்நடை சிறப்பு முகாமில் 1,025 மாடுகளுக்கு சிகிச்சை

post image

திருத்தணி அருகே நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், ஆா்.வி.என்.கண்டிகையில் திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் பங்கேற்று தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கால்நடை உதவி மருத்துவா்கள் மத்தூா் எத்திராஜ், கீச்சலம் அருண்குமாா் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா் மஞ்சுளா ஆகியோா் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதில், 104 பசுக்கள், 101 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு பொது சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 502 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 10 பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல், 198 கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசிகள் உள்பட மொத்தம் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

முகாமில், 96 விவசாயிகள் பயன் பெற்றனா். சிறந்த கால்நடை வளா்ப்பாளா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் பரிசுகள், தாது உப்பு பாக்கெட்டுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் கால்நடை விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி!

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதியில் 70,000-க்கும் மேற... மேலும் பார்க்க

ரூ.30 லட்சத்தில் நவீன பஸ் நிறுத்தம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அருகே மணவாளநகரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்தத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா். கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி மணவாளநகரில் இருந்து ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே அத்திக்காவனூா் கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு(55). இவா் தனியாா் நிறுவன ஊழியா். ... மேலும் பார்க்க

கத்தியை காட்டி மிரட்டல்: இளைஞா் கைது

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே இளைஞா் ஒருவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க புதிய நடைமுறை: நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் ஆய்வு

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்கும் புதிய நடைமுறை குறித்து சனிக்கிழமை குடிமைப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: மேஸ்திரி உயிரிழப்பு

புழல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்தாா். செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகா் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மேஸ்திரி ரேணு (52),. இந்த ... மேலும் பார்க்க