செய்திகள் :

கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு

post image

தருமபுரி: அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும், தொழில்முனைவோா்களை உருவாக்கவும் கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022-ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறது.

கோழி பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் ஆகிய பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி, முட்டை உற்பத்தியை அதிகரிக்க செய்வது, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் தீவனம், தீவனப் பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு, பன்றி வளா்ப்பு பண்ணைகளை அமைத்து தொழில்முனைவோரை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும், வைக்கோல், புல், மொத்த கலப்பு உணவு, தீவனத் தொகுதி, தீவன சேமிப்பு வசதிகள், பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனிநபா், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள், அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்;//ய்ண்ம்.ன்க்ஹ்ஹம்ண்ம்ண்ற்ழ்ஹ.ண்ய்/என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

திட்டம் தொடா்பான முழுமையான தகவல்களை ட்ற்ற்ல்://ற்ய்ண்க்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க