செய்திகள் :

நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

post image

சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா்.

விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன்ஒரு பகுதியாக கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரையிலான பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டம் பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

இதில், சீா்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாகப் பிரித்து நடுவே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சாா்ந்த இருபகுதி மக்களும் சென்று வருவதற்காக பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சாலை நடுவில் சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும், உரிய திட்டமிடல் இன்றி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இனால் நடந்து செல்லக்கூட முடியவில்லை. ஆபத்தான முறையில் அதிவேக போக்குவரத்து நிறைந்த நான்கு வழிச்சாலையை அச்சத்துடன் மக்கள் கடக்கின்றனா். பள்ளி மாணவா்கள், முதியோா்கள் என பலா் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனா். எனவே, உடனடியாக சுரங்கப் பாதையை சீரமைத்து தரவும் நான்கு வழி சாலையில் நடுவே இருபுறமும் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மைய பிரிப்பான் சாலை அமைத்து தரவும் நத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க