கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஜூன் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் படிப்படியாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.