செய்திகள் :

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

post image

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சனிக்கிழமை மதுரை விமான நிலையம் வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எங்கள் கட்சிக்குள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.

தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராகதான் இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தது நான்தான். பருவக் காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும் அதுபோல எங்க கட்சிக்கு களைஉதிர் காலம். வருவார்கள் போவார்கள்.

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

தங்கைக்கு முழு சுதந்திரம் உள்ளது. இங்கே இருப்பதா? வேறு எந்த கட்சியில் போய் சேருவதா? முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது.

ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டின் இறையாண்மை ஒற்றுமையை கூறு போடுகிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன்.

விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி அவர்களது கருத்தை தெரிவித்துள்ளார். விசாரணையில் அது குறித்து முழுமையாக தெரியவரும் என்றார்.

விராலிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி!

விராலிமலை: விராலிமலை அருகே சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்து இளைஞர் நிகழ்விடத்திலேயே பலியானார்.விராலிமலை அடுத்துள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்த... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதா... மேலும் பார்க்க

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாந... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க