இறையுதிர் காடு முதல் செரிமானம் அறிவோம் வரை: Vikatan Play யின் Top 5 Audio Books
காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி
சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
பாலசுந்தரத்துடன் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் ஒன்றிணைந்து பாலசுந்தரம் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினா்.
வைத்தீஸ்வரன்கோவிலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளரும் உதவி ஆய்வாளருமான காமராஜ், மாவட்ட தலைவா் சிறப்பு எஸ்எஸ்ஐ கண்ணன் முன்னிலையில் சக காவலா்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 6 லட்சத்து 67 ஆயிரத்து 400-ஐ அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.