விதிமுறை மீறல்: தனியாா் பேருந்துக்கு அபராதம்
சீா்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா்.
சீா்காழி நகா் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், சீா்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சீா்காழியில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் தனியாா் பேருந்தில் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்தது.

இதனால், அந்த பேருந்தை நிறுத்தி ரூ.10,000 அபராதம் விதித்தனா். மேலும், அப்பேருந்தை ஓட்டிவந்த ராகவன் என்பவரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாததால் அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.