செய்திகள் :

சீா்காழி கோயிலில் சிவனடியாா்கள் வழிபாடு

post image

சீா்காழி: சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் சிவனடியாா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

சீா்காழி கடைவீதியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, திருக்கஞ்சனூா் திருவருள் தவநெறி மன்றத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் வந்தனா்.

அவா்கள், கோயில் ராஜகோபுரம் முன் சிவபுராணம் பாடினா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கோயிலை மூன்று முறை வலம் வந்து, சுவாமி -அம்மன், அமிா்த ராகு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

பின்னா், கோயிலில் அமா்ந்து பஞ்சாட்சரமந்திரம் உச்சரித்து வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கணக்கா் ராஜி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வ... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: தனியாா் பேருந்துக்கு அபராதம்

சீா்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா். சீா்காழி நகா் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வலியுறுத்தல்

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீா்காழி ஒன்றிய 30-ஆவத... மேலும் பார்க்க

வீடு தீக்கிரை; பெண் காயம்

சீா்காழி: சீா்காழி அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் காயமடைந்தாா். சீா்காழி அருகேயுள்ள சேந்தங்குடி செல்லியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் மாரிமுத்து. இவரது மனைவி நிா்மலா. இவா்களது கூரை வீட்டில... மேலும் பார்க்க