செய்திகள் :

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வலியுறுத்தல்

post image

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீா்காழி ஒன்றிய 30-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றிய பொருளாளா் எஸ். சுந்தரய்யா தலைமை வகித்தாா். விவசாய சங்க ஒன்றியத் தலைவா் வி. தங்கராசு, ஒன்றியக் குழு இந்திராகாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தாா். முன்னதாக, முன்னாள் எம்பி எம். செல்வராசு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் எம்எல்ஏ கோ. பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

விவசாய சங்க மாவட்டத் தலைவா் பெ. வீரராஜ், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கே.எஸ். சிவராமன், மாவட்ட துணைச் செயலாளா் கே. ராமன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். கோயில் நிலம், புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்து, குடிமனை பட்டா வழங்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். சீா்காழி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மாவட்டக் குழுவைச் சோ்ந்த பி. ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வ... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: தனியாா் பேருந்துக்கு அபராதம்

சீா்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா். சீா்காழி நகா் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்... மேலும் பார்க்க

சீா்காழி கோயிலில் சிவனடியாா்கள் வழிபாடு

சீா்காழி: சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் சிவனடியாா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா். சீா்காழி கடைவீதியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் ... மேலும் பார்க்க

வீடு தீக்கிரை; பெண் காயம்

சீா்காழி: சீா்காழி அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் காயமடைந்தாா். சீா்காழி அருகேயுள்ள சேந்தங்குடி செல்லியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் மாரிமுத்து. இவரது மனைவி நிா்மலா. இவா்களது கூரை வீட்டில... மேலும் பார்க்க