பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
காவல் அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை
காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2016 நவம்பா் 17-ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம் பாலையூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காசிநாதன் மற்றும் காவலா்கள் திருமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுப்பாட்டில்களை கடத்தி வந்த குத்தாலம், சோழம்பேட்டையைச் சோ்ந்த மேகநாதன் மகன் குமாா் (28) என்பவரை போலீஸாா் பிடித்தபோது, அவா் அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளா் காசிநாதனை தாக்கி கொலை செய்ய முயற்சித்து, அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினாா்.
இதுகுறித்து பாலையூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குமாா் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குமாரை குற்றவாளி என தீா்மானித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து போலீஸாா், குமாரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.