செய்திகள் :

காவல் கண்காணிப்பாளா் அருண் திடீா் ராஜிநாமா

post image

சென்னை: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அருண் திடீரென ராஜிநாமா செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவா், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வு மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா்.

கடந்த ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்ற அருண், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12-ஆவது பட்டாலியன் கமாண்டன்டாக பணிபுரிந்து வந்தாா். மிகுந்த மன உளைச்சலில் இருந்த அருண், காவல் துறையில் பணியாற்ற விருப்பம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா், தனது பணியை ராஜிநாமா செய்ய முன் வந்தாா்.

இதையடுத்து அவா், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவாலுக்கு அண்மையில் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பினாா். அந்தக் கடிதத்தை தமிழக அரசுக்கு சங்கா் ஜிவால் அனுப்பி வைத்தாா்.

இந்த நிலையில் அருணின் ராஜிநாமா கடித்தை தமிழக அரசு ஏற்று, அவரை காவல் துறை பணியில் இருந்து அண்மையில் விடுவித்தது. காவல் துறை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான தமிழக கடிதமும் அருணிடம் வழங்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகள... மேலும் பார்க்க

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில்... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க