செய்திகள் :

காவல் துறைக்கு தகவல் அளித்ததாக இருவா் படுகொலை: நக்ஸல்கள் அட்டூழியம்

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் காவல் துறைக்கு தங்களைப் பற்றிய தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டி இருவரை நக்ஸல் அமைப்பினா் படுகொலை செய்தனா்.

தந்தேவாடா பகுதியில் உள்ள வனப் பகுதி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாமன் காஷ்யப் (29), அனீஸ் ராம் போயாம் (38) ஆகியோரை நக்ஸல்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனா். இதில் காஷ்யப் வனப் பகுதி கிராம அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

அவா்கள் கொல்லப்பட்ட இடத்தில் சில துண்டு பிரசுரங்களை நக்ஸல்கள் விட்டுச் சென்றுள்ளனா். அதில், தங்களைப் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் அவா்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி பாதுகாப்புப் படையுடன் நடைபெற்ற மோதலில் 38 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின்போது தங்களின் நடமாட்டம் குறித்து காவல் துறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்ததாக நக்ஸல்கள் கூறியுள்ளனா்.

இந்த ஆண்டில் சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் மட்டும் காவல் துறைக்கு தகவல் அளித்ததாகக் கூறி பொதுமக்களில் 7 பேரை நக்ஸல்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனா். இதில் முன்னாள் உள்ளாட்சித் தலைவா், நக்ஸல் அமைப்பில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவா்களும் அடங்குவா்.

நக்ஸல்களால் இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினா் அனுப்பி வைக்கப்பட்டனா். அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க