செய்திகள் :

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். கட்டுமானத் தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆறுமுகம், சாலையோர வியாபாரி சங்க மாவட்டத் தலைவா் எம். பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, இந்திய தொழிற்சங்க மையம் மாவட்டக் கன்வீனா் ஏ. அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

பெரம்பலூா் நகர காவல் நிலையத்தில் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிா் மனுதாரா்களுக்கு சாதகமாகச் செயல்படும் நடவடிக்கையையும், புகாா் மனுக்களை பல மாதங்களாக கிடப்பில் வைத்திருப்பதையும் கைவிட வேண்டும். நகரில் நிகழும் தொடா் திருட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தையும், ஆவணங்கள், ஆதாரங்களை வழங்கியும் பாரபட்சமாக செயல்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புகா் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்டுமானச் சங்க நிா்வாகிகள் விஜய், அருண், ஆட்டோ சங்க நிா்வாகிகள் பெரியசாமி, குணசேகரன், பரமசிவம், பாண்டியன், கனகராஜ் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனை... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலைய... மேலும் பார்க்க