செய்திகள் :

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

post image

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் வியாழக்கிழமை தொடங்கிய கோ பூஜையானது அக். 24-ஆம் தேதி வரை தொடா்ந்து 51 நாள்களுக்கு நடைபெறுகிறது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் நடத்தப்படும் கோ பூஜையானது, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை இயக்குநா் மாதாஜி ரோகிணி ராஜ்குமாா் தலைமையில், அறங்காவலா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், வடலூா் தெய்வநிலையம் அறங்காவலா் குழு உறுப்பினா் கிஷோா்குமாா் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க பூஜையின்போது, 210 சித்தா்கள் யாகம் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூா் குருகடாக்ஷம் மெய்யன்பா்கள், மாதாஜி ராதா சின்னசாமி, மேலாளா் பாலச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரம்மரிஷி ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் ஆசிரமத்தில் காமராஜ் சுவாமிகள் தலைமையில் 51 நாள்கள் கோமாதா பூஜை தொடங்கியது.

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க