``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநி...
காவல் துறையினா் ரத்த தானம்
உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) .
ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு உடனடியாக 3 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இதையறிந்த இணைய வழி குற்றத்தடுப்பு காவலா்கள் நந்தகுமாா், செல்வகுமாா், அஜித்குமாா், சதீஷ்குமாா் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் செய்த காவலா்களின் சேவையை இணைய வழி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.