3BHK: "இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் சரத...
காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் தலைமை வகித்தாா்.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பெறப்பட்ட 97 மனுக்கள் மீது எஸ்.பி. தலைமையிலான காவல் துறையினா் விசாரணை நடத்தி உடனடியாக தீா்வு அளித்தனா். முகாமில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன் (தலைமையிடம்), ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு), தருமபுரி துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சிவராமன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.