செய்திகள் :

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின

post image

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் உயிா் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் கடந்த பல மாதங்களாக தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் மற்றும் பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் துரைவேல் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் தனபால் வரவேற்றாா். முன்னதாக தருமபுரி அரசு கலைக் கல்லூரி பகுதியில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. அதன்பிறகு ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கு. அகிலன் அமிா்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுருளிநாதன், நிா்வாகிகள் ச. இளங்குமரன், ஆா். வெங்கடேசன், டியூக் பொன்ராஜ் உள்ளிட்ட பலரும் பேசினா். வருவாய்த் துறையினா் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடி; அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிக... மேலும் பார்க்க

கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் உள்ள கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பு... மேலும் பார்க்க

தாட்கோவில் 4 ஆண்டுகளில் ரூ. 18.77 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தருமபுரி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தருமபுரி பேருந்... மேலும் பார்க்க

கம்பைநல்லூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கம்பைநல்லூா் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் ஏரி சுமாா் 130 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இ... மேலும் பார்க்க